tamil new year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil new year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 15, 2012

வேர்களின் வாழ்த்து !

திருவள்ளுவர் ஆண்டு  2043  --தமிழர் பெருநாள் பொங்கல் !

தை முதன்நாளே தமிழர்தம் ஆண்டின் துவக்கமென அறிவித்து அதற்கென இயக்கங்களை ஏற்படுத்தி தங்கள் வாழ்நாளை பகிர்ந்துகொண்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் அத்தனைபேரையும் இப்போது வேர்கள் நினைவு கூருகிறது.

இந்த மண்ணுக்கும் மொழிக்கும் உரிய உரிமைகள் ஒவ்வொன்றையும் போரடிப்போரடித்தான் பெருவது நமக்கெல்லாம் பழக்கமாயிருந்திருக்கிறது.
எந்த உரிமையும் தானே கிடைத்ததாக வரலாறு சொன்னதில்லை. இப்போதும் அதுதான் நிகழ்திருக்கிறது.கைகளில் கிடைத்த பந்து கைநழுவிப்போயிருக்கிறது. தமிழன் விழிக்கும்போது மீண்டும் கைகளில் சிக்கும் என்று நம்பலாம்.

இந்த தைமுதல் நாளை புத்தாண்டாகவும் பொங்கற் பெருநாளாகவும் கொண்டாடிக்களிக்கும் உள்ளங்களுக்கு வேர்கள் தன் இனிய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.
-----------------------------------------------------------------

இடுகை 0083



வெள்ளி, ஜனவரி 14, 2011

பூத்து குலுங்கும் புத்தாண்டும் பொங்கி வழியும் தைத்திருநாளும்

( திருவள்ளுவராண்டு  2042 )
வள்ளுவராண்டு வெளிச்சத்துக்கு வந்து இன்றோடு ஒரு ஆண்டு எப்படியோ ஓடிவிட்டது.ஏறத்தாழ பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலத்திலேயே இப்படியொரு கனவைக் கண்டு கனவு நனவாக ஓயாது குரலெழுப்பிய மூத்த தமிழறிர்களில் ஒருவர் கூட இன்று உயிரோடு இல்லையென்றே நினைக்கிறேன்.
விலங்குகளிலிருந்து விலகி சிந்திக்கும் செயல் திறன் மிக்க மனிதகுலம் தொடர்ந்து வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது.அத்தகைய மாற்றங்களில் பெரும்பாலும் சமூகத்தின் சகல முனைகளுக்கும்
நல்லனவாகவும் தீயனவாகவுமே அமைந்தே இருந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. இருந்தபோதும் கடந்த
காலங்களில் ஏற்றுக்கொண்ட மோசமான மரபுகளை தவிற்து காலத்துக்கேற்ற நன்னெறிகளை தொடர்வதே ஒரு உயர்ந்த சமுதாயத்தின் செயல்பாடாக இருக்கமுடியும்.
இந்த சமூகத்தின் அவலங்களுக்காக வாழ்நாளின் இறுதிவரை குரல் கொடுத்த தந்தை பெரியாரின் கடுமையான சொற்களை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.
வயதிற் மூத்தவன் என்றோ உறவில் நெருங்கியவன் என்றோ கூறுவதை கேட்காதே ! மெத்த படித்தவன் என்றோ
இந்த நாட்டிற்கே முதல்வன் என்றோ அவன் கூறுவதை நம்பிவிடாதே! சுயமாக சிந்தித்து செயல்படு !
குறைந்த கல்வியையே பெற்றிருந்த தந்தை பெரியாரின் வார்த்தைகளில் கடுமை காணப்பட்டாலும் அவை இந்த சமூகத்தின் அவலங்களுக்கு ஒரு சாவுமணி என்பதை உணரவேண்டும்.ஆண்டாண்டு காலங்களாக இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த மதமெனும் பேய்கள் ஏற்றிருந்த மறபுகள் எண்ணற்றவை.ஒழுக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் அறுபது ஆண்டுகளின் பெயர் பின்புலன்களும் கணக்கியலுக்கு ஒத்துவராத ஆண்டு எண்ணிக்கையும் உதறியே வள்ளுவராண்டு பிறந்தது. அன்றெல்லாம் வழிகாட்டிகளின் ஆயுள் அத்தனை கெட்டியாக இருந்திருக்கவில்லை
சின்னாபின்னமாக சிதறிகிடந்த இந்த சமூகச்சீரழிவை சரிசெய்ய போதுமானதாக இருந்திருக்கவில்லை.இருந்தபோதும் ஒருவர் விட்ட பணியை தொடர இன்னொருவர் இருந்தபோது இந்த மண்ணும் மொழியும் 
தொடர்ந்து சீர்பெற்றே வந்திருக்கிறது.
காந்தி கண்ட கனவை நனவாக்க நேரு செயல்பட்டார். இராமகிருஷ்ணர் சிந்தனைகளை தொடர்ந்து சொல்ல ஒர்
விவேகாநந்தர் பிறந்தார். தமிழ் மண்ணில் உதித்தெழுந்த தந்தை பெரியார் அண்ணாவை நம்பினார்.அண்ணா
வடித்தெடுத்த கொள்கைகளை பரிமாற கலைஞரை விட்டுச்சொன்றார்.
கலைஞர் தூக்கிப்பிடித்த ஒளியில்இன்று திருவள்ளுவராண்டு உலகறிய இரண்டாம் அடியெடுத்து வைக்கிறது.
நகர்ந்து போன ஆண்டு பெரிமிதம் அளிக்கக்கூடிய தருணங்களையும் சங்கடமும் சஞ்சலமும் நிறைந்த
நாட்களையும் சந்தேகம் நிறைந்த வடுக்களையும் நிரம்ப விட்டுச் சென்றிருக்கிறது. பூத்து குலுங்கும் இந்த புத்தாண்டு அத்தனைக்கும் நல்ல பதில் சொல்லுமென்று நம்புவோம்.
இனிய நெஞ்சங்கள் அத்தனைக்கும் புத்தாண்டு தொடக்கத்துக்கும் தமிழர்தம் நிகரற்ற தைத் திரு நாளுக்கும் வேர்களின் ஆழமான வாழ்த்துக்கள் !
சென்னையிலிருந்து...
பாண்டியன்ஜி
---------------------------------
இடுகை
0037  தை முதல் நாள் ( 15 01 2011 )
உங்கள் மறுமொழிகளை வெளிப்படுத்தி வேர்களுக்கு உரமிடுங்கள்!.