வியாழன், மார்ச் 24, 2011

யார் கொடுத்தார் இந்த அரியாசனம்

அரசியல் அரங்கம் ( ஒன்று )
                       பாண்டியன்ஜி
அடுத்த மாதம் ஏப்ரல் 13 ல் நிகழயிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முறையான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது.ஒரே நாளில் ஒரே நேரத்தில் நிகழப்போகும் வாக்குப்பதிவுக்கான முன்முயற்சிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் துவக்கிவிட்டது.
அப்படியொன்றும் யாரும் எதிர் பாராத வகையில் திடீரென்று இந்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதென்று கூறமுடியாது,வர இருக்கிற மார்ச் ஏப்ரல்களில் இந்த தேர்தல்கள் நிகழக்கூடும் என்பதை அவ்வபபோதுதேர்தல் ஆணையம் பேசியே வந்திருக்கிறது.
இருந்தபோதும் தமிழக அரசியல் கட்சிகள் இப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்தது போல தேர்தலுக்கான அணி சேர்வதிலும் வேட்பாளர் காண்பதிலும் பெரிதும் பின்தங்க நேர்ந்திருக்கிறது.வேட்பு மனு தாக்கலுக்கான முதல் நாள் கடந்த பின்னும் தொடர்ந்து இழுபறியாயிருந்த இந்த கூட்டணி பேரம் இப்போது நிறைவுக்கு வந்துவிட்டதாகவே கொள்ளலாம்.தொடர்ந்து சில நாட்களாக அரசியல் நோக்கர்களுக்கே தெளிவின்றி காட்சியளித்த அரசியல் குட்டை இப்போது ஒருவாறு தெளிவுக்கு வந்திருப்பதைக் காண முடிகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று இசை ஓய்ந்தபோது இருக்கை இல்லாமல் களத்தை விட்டே வெளியேறிய ம திமுக வின் நிலை துரதிஷ்டமானதுதான்.
முன்னெப்போதும் போல இந்த கூட்டணி பேரம் இந்த முறை அத்தனை இலகுவாக முடிந்திட வில்லை.பெரிதும் வலுவாக கருதப்பட்ட
திராவிட இயக்கங்களே தங்கள் சந்திக்க நேர்ந்த சமீப கால தடுமாற்றங்களால் கூட்டணிக்கட்சிகளிடையே தங்கள் தொகுதிகளை 
பெரிதும் இழக்க நேரிட்டிருக்கிறது.
கணிசமான தொகுதிகளப் பெற்று அரசியலில் தங்கள் உயிரோட்டங்களை வெளிப்படுத்த கூட்டணியில் கூடிய கட்சிகளனைத்தும் 
மிகுந்த மனக்காயங்களுடனே இணைந்திருக்கின்றன.உளமார ஒரு கட்சியும் ஒன்றிணயவில்லை என்பதையும் உணர முடிகிறது.
தேர்வுக்கு முதல் நாள் விழுந்து விழுந்து படிக்கும் மாணவனைப்போல ஆளும் திமுகவோ மிச்சமிருக்கிற திட்டங்களை முழு வீச்சில்
செயல் படுத்த துவங்கியபோது தேர்தல் ஆணையத்தின் நன்நடத்தை விதிமுறைகள் எட்டுதிசைகளுக்கும் சீறத் துவங்கிவிட்டன.
தனியுரிமை பெற்ற தேர்தல் ஆணையம் தேவைக்கதிகமான அதிகாரங்களை அள்ளிக் கொண்டு மக்களின் இயல்பையே செயலிழக்கச் செய்து விட்டது. இதற்கிடையே ஏற்பட்ட நீதிமன்றங்களின் தலையீடு வரவேற்கதக்கதுதான்.

சாலைகளின் பள்ளங்களை நிரப்ப( பைகளை நிரப்பி )
ஓரங்களில் குவிக்கப்பெற்ற கட்டுமான பொருள்கள் கேட்பாரற்று இப்போது கொட்டிக் கிடக்கிறது.
வங்கிகள் வழங்கும் மகளிர்க்கான சுயுதவிக்குழு சுழல் நிதிகள் நிருத்தப்பட்டுவிட்டன
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டி தருவேன் என்று என்றோ அறிவித்த திட்டத்தில் கடைசியாக கொள்முதல் செய்யப்பெற்ற
தொலைக்காடசி பெட்டிகளின் நிலை இனி பரிதாபத்துக்குரியதுதான்.
கையூட்டு கொடுத்து பெறப்பட்ட அரசு வேலைகள் அல்லது ஆணைகள் கைக்கு வந்து சேரவில்லை.
வங்கிகணக்கில் அவசரத்துக்கு எடுக்கப் பெற்ற பணத்துக்கு தேர்தல் ஆணையம் கணக்கு கேட்கிறது. 
நகரின் கல்யாண மண்டபங்களையும் வாடகை உஊர்திகளையும் ஆணையம் தன் வசதிக்கு பறித்துக்கொண்டு விட்டது.
ஆடு கோழிகள் கணக்கிடப்படுகின்றன.
பிரியாணிக்கு விலை சொல்லுகிறது.
டீ வடைக்கான செலவுக்கணக்குகளை முன்னதாகவே கேட்கத்துவங்கிவிட்டது.
ஏற்கனவே பல்வேறு சங்கடங்களுக்கிடையே நகரின்முச்சந்தியில் நிற்கிற அல்லது உட்கார்ந்திருக்கும் தலைவர்கள் சிலைக்கூட
துணி போட்டு மூடமுயன்றிருக்கிறது தேர்தல் ஆணையம்.
கைகளை உயர்த்தி ஆங்காங்கே வைக்கப் பெற்றிருக்கிற அண்ணா எம்ஜியார் சிலைகள் ஒருவேளை நன்நடத்தை விதிகளுக்கு ஊறு விளைவித்திடுமோ என்ற அச்சமாக கூட இருக்கக்கூடும்.

மொத்தத்தில் வேட்பாளர்களை நிராயுதபாணியாக களத்தில் இறக்கி வேடிக்கை பாற்கிறது.சட்டங்களும் திட்டங்களும் தவறுகளைத் தடுத்திடவும் மக்கள் உரிமைகளைக்காத்திடவுமே வகுக்கப்படுவதாக படித்திருக்கிறேன்
எப்போதும் இல்லாத இத்தனை அதிகாரங்கள் இவர்களுக்கு யார் கொடுத்தது.
.
இடுகை 0044




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !