( 26 08 2012 ல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் வலைப்பதிவாளர் விழா )
வில்லவன்கோதை
இணையத்தில் சிதறிக்கிடந்த
கைக்கெட்டிய நெல்லிக்காய்களை திரட்டி முதன் முறையாக மூட்டையாக
கட்டியிருக்கிறார்கள் கவிஞரும் வலைப்பதிவாளருமான மதுமதியும் அவரைச் சார்ந்த சில
சென்னை வலைப்பதிவாளர்களும்.
செவிக்கு முழுமையாக
உணவிருந்தபோதே அவ்வப்போது வயிற்றுக்கும் குறைவின்றி ஈயப்பட்டது. புத்தகங்களின்
தள்ளுபடி விற்பனையும் குறுதகடுகளின் அணிவகுப்பும் அரங்கை அலங்கரித்தது.
மூத்த பதிவர்களின்
பங்களிப்பை போற்றி தன் உரையைத்துவக்கினார் பட்டுக்கோட்டை பிரபாகர்.
மனைவிக்கு காதுகொடுத்து
கேட்க அவகாசமில்லை. அலைந்து திரிந்து வரும் மகனுக்கோ சலிப்பான தருணங்கள் மருமகளுக்கு
கைபேசி உரையாடலுக்கிடையே உபயோகமற்ற
விஷயங்கள்.குழந்தைகளுக்கு கம்யூட்டர் கேம்ஜ் என்ற பெருந்திரைகள் என்ற இன்றைய சூழலில்
யாரும் என்னோடு
பேசவேண்டாம் .என்னோடு பேச லட்சம் பேர் இணையத்தில் இருக்கிறார்கள் என்பது இன்றைய முதியவர்களுக்கு
இணையம் தந்தவரப்பிரசாதம் என்றார் பிரபாகர்.
வலைபூக்கள் என்பது
ஒருகாலத்திய கையெழுத்துப்பத்திரிக்கைகளின் நீட்சியே என்று துவங்கிய பிரபாகர்
வலைதளங்களகளில் படைப்புகளை விமர்சனம் செய்யுங்கள்.படைப்பாளிகளை விட்டுவிடுங்கள்
என்றார். கலை ரசனை இருந்தாலொழிய திரைப்படங்களை விமர்சிக்காதீர்கள்.அது நேர்மையன்று
என்று பேசி விழாவை நிறைவு செய்தார். பதிவர்கள்
சந்திப்பு கூடிக்கரையும் காகங்களல்ல. கொட்டித்தீர்க்கும் மழையாக இருக்கட்டும் என்ற
பதிவர் சுரேகாவின் இணைப்புரையோடு பதிவர்
சந்திப்பு கலைந்தது.
ஒரு கட்டுப்பாடற்ற இனம் கட்டுப்பாடுகள் ஏற்படும்முன்
தன்னைத்தானே . கட்டுப்படுத்திக்கொள்ளுமா. அப்போது
மட்டுமே வலைப்பூக்கள் தவிற்க இயலாத சக்தியாக உருவெடுக்கக்கூடும்.
_____________________________________________________________
இடுகை 0094
தமிழ்வெளியல் சுற்றிய போது இதைக்கண்டேன். நன்றி.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.