வெள்ளி, ஜூன் 25, 2010

வள்ளுவராண்டு 2041

தை திங்கள் முதல் நாள் – வள்ளுவராண்டு 2041
——————————————————————
பொழுது புலர்ந்தது .கதிரவன் மெல்ல மெல்ல உறக்கத்திலிருந்து கண்விழிக்கிறான்.
வெகுதூரத்தில் தைமகள் யாரையோ கைபிடித்து அழைத்து வருவதை காண்கிறேன்.மெல்ல மெல்ல அருகில் வந்த தைமகள் என் குழப்பமறிந்து வியப்புடன் வினவுகிறாள் .’ இவரை தெரிய வில்லையா உங்களுக்கு ?.’
கைகளை பிசைந்தவாறு யாரம்மா இவர் .முற்றிலும் புதியவராய் தோன்றுகிராறே. என்கிறேன்.
இவறோன்றும் புதியவரில்லை.எண்பது ஆண்டுகளாக தன்னந்தனியாக வரும் இவரை நம் பிள்ளைகலைஞர்தான் இன்று என்னோடு அனுப்பி வைத்தார்.
ஏறத் தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்குழு கிருஸ்து பிறப்பிற்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் பிறந்த மூத்த குடிமகன் வள்ளுவன் பெயர்சூட்டி தமிழர்தம்
ஆண்டினை இவ்வுலகுக்கு பறைசாற்றினர் .தொடர்ந்து வந்த எத்தனையோ தமிழறிஞர்கள் முயன்றும் தகுந்த தகுதி தமிழாண்டுக்கு கிடைக்க வில்லை.இன்றோ நம் பிள்ளை கலைஞர் கையொப்பமிட்டு என் கைபிடித்து என்னோடு வர வழி செய்தார்.காக்க வேண்டியது உம் பொறுப்பு ! என்ற தைமகள் வயல் வழியே விரைந்தாள் .
அத்தனையும் உண்மை .
1921- ல் திரு வி க உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழ் மேதை மறைமலை அடிகள் தலைமையில் ஒன்று கூடி
கிருஸ்து பிறப்பிற்கு முப்பது ஆண்டுக்கு முன் பிறந்த வள்ளுவன் வயதை கணக்கிட்டு திருவள்ளுவராண்டு துவக்கத்தை அறிவித்தார்கள்.
2006 – ல் அரசு ஏற்று அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது.இன்று 2010 – ல் கலைஞர் கையெழுத்திட்ட சட்டவடிவின் மூலம் தமிழர்தம் தகுதி உயர்த்தப்பட்டிருக்கிறது.
தைத்திருநாளோடு தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடுவோம் . அனைவருக்கும் பொங்கல் , புத்தாண்டு வாழ்த்துக்களை வேர்கள் தெரிவித்து கொள்ளுகிறது.
பாண்டியன்ஜி
இடுகை 0022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !