ஞாயிறு, ஜனவரி 05, 2020

இலக்கியம் பேசு ..அரசியல் அகற்று !56

 05 01 1911 பதிவு .
இனிய இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் தாங்கட்கு 
50 களில் திராவிட இயக்கங்கள் கையிலெடுத்த ஆயுதங்களான பகுத்தறிவு சிந்தனைகளும் தாய் மொழி பற்றும் என்னை பெரிதும் ஈர்த்தன. இன்னும் சொல்லப் போனால் சிந்தனைத் திறனையும் மொழியின் சுவையையும் முதல் முதலில் ஊட்டியவர்கள் அவர்கள்தாம்.இன்று அவர்கள் வேண்டுமானால் கலைஞரின் சந்ததியைப்போல் திசை தவறி பயணித்திருக்கலாம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வரிகளுக்கேற்ப பின்நாளில் எந்த பாகுபாடுமின்றி பேச்சும் எழுத்தும் எங்கெல்லாம் மதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் என் பார்வை படர்ந்தது.
அப்போது நீங்கள் காங்கிரஸ் பேரியியக்கத்தில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் நிகழ்த்திய ஒரு சிலசொற்பொழிவுகளையும் பட்டிமன்ற விவாதங்களையும் வியப்போடு கேட்டவன் நான்.நீங்கள் விவரித்த புராணச்சுவைகள்கூட என் தமிழ் கருதி என் பகுத்தறிவுச் சிந்தனைகள் குறுக்கே வந்ததில்லை.இலக்கியங்களையும் புராணங்களையும் பேசுவதைப்போல தான் சார்ந்து நிற்கும் கட்சிகளுக்கும் அதன் தம் தலைவர்களின் நேர்மைக்கும் வாதிடுவது எத்தகைய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்தவன் நான். அதன் பொருட்டே வாழும் தலைவர்களின் சித்திரங்கள் நம் வரவேற்பரைக்கு என்றும் ஏற்றதல்ல என்று இன்றும் நம்புகிறவன் . அவர்கள் அத்தனைபேரும் ஒருநாள் தங்கள் ஆடைகளை மாற்றி நம் முகங்களில் முழுமையாக கரிபூசக்கூடும்
என்பதை உணர்ந்திருக்கிறேன்.அதைப்போல கட்சிகளில் இருக்கும் போது கட்சிகளின் முடிவகளுக்கு செவி சாய்த்தே ஆக வேண்டும்.அது இயலமற் போனது துரதிஷிடம்தான்.
இயல்பாகவே மிகுந்த தன்னம்பிக்கையும் தமிழ்ச்செறுக்கும் நிறைந்த குணம் உங்களை இன்று தனித்திருக்க தங்களுக்கு உதவியிருக்கிறது என்று கருதுகிறேன்.
உங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தின்பால் இருக்கின்ற மாறா பற்றை என்னால் உணரமுடிகிறது.அதே
சமயம் அந்த பல்லக்கு தூக்கிகளின் கூத்தை உங்களால் சீரணிக்க முடியவில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்..கடந்த சில நாட்களாக நீங்கள தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிற கருத்துக்கள் ஒவ்வொன்றையும் படித்தே வருகிறேன்.இவையனைத்தும் நீங்கள் எந்த தளத்தில் நிற்கிறீர்கள் என்பதை அறிவிக்காவிடினும் எந்த தளத்திலிருந்து பேசுகிறீர்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது.
கலைஞர் மீதும் திமுக மீதும் தங்களுக்கேற்பட்டிருக்கிற அறச்சீற்றமோ அல்லது சாதாரண சீற்றமோ
வரிக்கு வரி வெடித்துச் சிதறுகிறது.அதே சமயம் நீதி தேவதை ஜெயலலிதாவுக்காக உங்கள் மேலான யோசனைகளையும் அவ்வப்போது வாரி வழங்கி புராண காலத்து கண்ணனையும் சரித்திர சாணக்கியனையும் விஞ்சியிருக்கிறீர்கள்.வைகோவுக்காக கவிபாடிய கரிசனம் வியப்பளித்தாலும்
அதுவும் ஜெயாவுக்காக என்றறிந்தபோது தங்கள் சாணக்கியம் துர்வாசர் சோ வையே மிஞ்சியதை உணர்கிறேன்.
அப்படி நீங்கள் எழுப்பும் கூற்றுதான் என்ன.
திமுக ஊழலின் ஊற்றுக் கண்ணாகி விட்டது.திமுக வில் வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.கலைஞரின் வாரிசுகள்இந்த மண்ணையே சுரண்டுகிறார்கள்.இலவசங்களை வாரியிறைத்து பாமரமக்களின் வாழ்க்கையே நாசமாக்குகிறார்கள்.
பெரும்பாலும்
நடுத்தர வர்கத்தினரும் பத்திரிக்கைகளும் எழுப்புகிற இவைகளைத்தான் நீங்களும் எதிரொலிக்கிறீர்கள். இவையனைத்திலும் உண்மையே இல்லையென்று வாதிட நான் வரவில்லை.
நீங்கள் அதிமுக வுக்காக வாக்கு கேட்கவில்லை என்றாலும் அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை மறுக்கமுடியாது.
திமுக வெளியேற்றப்பட்டால் ஆட்சியில் அமரப்போவது கம்யூனிஸ்ட் பாண்டியனா.அல்லது அமையப்போவது உங்கள்
கனவு காமராஜர் ஆட்சியா.
அந்த அணியை திரும்பி நோக்குங்கள். கம்யூனிஸ்ட் உட்பட அந்த அணியில் ஊழலற்ற இயக்கம் ஏதேனும் உண்டா.எந்த அணியில் குடும்ப அரசியல் நுழைவு தவிற்கபட்டிருக்கிறது.இலவசங்களை ஏற்காத அரசியல் இயக்கங்கள் இருக்கிறதா.பாட்டாளி வர்கத்தின் அடையாளம் என்று சொல்லப்படுகிற கம்யூனிஸ்ட்கள் உட்பட ஊழலற்ற அமைப்புக்கள் எதனையும் காணமுடியுமா? வாரிசுளே அற்ற கட்சிகள் எதுவும் இந்த மண்ணில் உண்டா ?வாரிசுக்கு எதிரான மூதறிஞர் இராஜாஜியையும் பேரறிஞர் அண்ணாவையும் இன்னும் எத்தனை காலங்களுக்கு நாம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம்?ஓட்டுக்கு இலவசங்களை அறிவிக்காத கட்சி எதுவும் கண்களுக்கு புலப்படுகிறதா.
இந்த பாமரமக்கள்தானே ஏறதாழ பத்தாண்டுகள் ஜெயிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.அநத காலங்களில் அவர் இந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஆற்றிய சாதனை அடையாளங்கள் எதனையும் காட்ட முடியுமா. அவர் இந்த மக்களின் ஒவ்வொரு பிரிவிற்கும் இழைத்த அவலங்கள் தாமே மிஞ்சின.இறுதியில் 63 கோடிக்கு கணக்கு சமர்ப்பித்ததுதானே நிகழ்ந்தது.
திருக்குவளையில் இருந்து துண்டோடு வந்த கலைஞரைப் பார்த்தவர்கள் தேர்தலுக்கு காப்புத்தொகை செலுத்த கைவளையலை அடகுவைத்ததாக ஜெ எழுதியதை படிக்காமல் போனது வியப்பானது இல்லையா.
இன்றைய கலாச்சார சூழலில் ஊழல்கூட எதார்த்தம் என்று கொள்ளலாம்.அதே சமயம் மக்களின் வாக்குகளைப்எ பெற்று ஆணவத்தையும் அகங்காரத்தையும் முன்னுறுத்தி பொய்யும் புரட்டும் கலந்த அரசை எப்படி அனுமதிப்பது. பிரதமர் மன் மோகன் சிங் , வாஜ்பாயி ,ஜஸ்வந் சிங் , ஆளுநர் சென்னா ரெட்டி முதல் இனறைய கடைசி தா பாண்டியன் வரை அவரை சந்திக்க நேர்ந்த அனுபவங்கள் எத்தனை.
கூலித்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கூட இன்று ஊழலில் பேசப்படவில்லையா?
திமுகவில் ஊழலே இல்லை என்று பேச எந்த காரணமும் என்னிடத்தில் இல்லை.அதே சமயம் வேறு ஒரு ஊழலற்ற ஒரு இயக்கம் இருப்பதாகவும் எனக்குத்தோன்றவில்லை.
திமுகவில் வாரிசுகள் கட்சியில் முக்கியத்துவம் பெற்றிருப்பது உண்மை.அதே நேரத்தில் வாரிசுகளற்ற ஒரு கட்சியும் இந்த மண்ணில் இருப்தாக எனக்கு தெரியவில்லை.ராஜீவ் காந்தியை காங்கிரஸ் மாலை போட்டு தேர்ந்தெடுத்தது போல் அந்தந்த கட்சியின் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கவலை.இடையில் ஓநாய்களுக்கு வேலை இருப்பதாக தோன்றவில்லை.
அதனையும் தாண்டி திமுக ஒரு இயக்கமாக இயங்குகிறது. கூட்ங்களாக அல்ல.
திமுக மக்களையும் மற்றவர்களையும் மதிக்கிறது. இன்றைய சூழலில் மின் வெட்டு ஒன்றைத்தவிற
மக்கள் தேவைகளுக்கு குறையொன்றும் இருப்பதாக தெரியவில்லை.ஊடகங்கள் எதிரொலிப்பதைப்போல் ஊழல்கள் இருக்கலாம். அதை சி. பி .அய்யும் நீதிமன்றங்களும் கவனித்துக்கொள்ளும் . புலனாய்வு இதழ்களும் சுப்ரமணி சாமியும் ஒத்துழைக் கக்கூடும்.
எந்த எழுத்தும் பேச்சும் நிமிர்ந்து நிற்க உண்மையான சிந்தனைகள் அடிப்படையாக அமைய வேண்டும். நாவலராய் திழ்ந்த நெடுஞ்செழியன் காணாமற் போனது அதனால்தான்.
அதுபோல.உங்கள் கவிதைக் கூட்டுக்குள் இந்த அரசியல் அசிங்கங்கள் தேவைதானா.
உங்கள் பேச்சும் எழுத்தும் அசாத்தியமானது.உங்களால் குறுகியகட்சிக் கட்டுப் பாட்டுக்குள்
நீடிக்க முடியாது என்றே கருதுகிறேன்.எத்தனையோ எழுத்துச் சிற்பிகளும் பேச்சு வல்லுநர்களும்
அரசியல் அகற்றி தமிழாய் வாழ்வதைக்காண்கிறேன். அன்னைத் தமிழுக்கு அணி சேற்க உங்கள் எஞ்சிய வாழ்க்கை உதவட்டும். இலக்கியம் பேசுக. அரசியல் தவிற்க.
சென்னையிலிருந்து பாண்டியன்ஜி.
இடுகை 0052


குற்றமும் தண்டனையும் !


ஆந்திர மாநிலத்தில் இளம் பெண் மருத்துவர்ஒருவர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்டு   உயிரோடு கொளுத்தப் பட்ட நிகழ்வும் அதனைத்தொடர்ந்து அந்த  நான்கு குற்றவாளிகளைக் காவல் துரையினர் என் கவுண்டரில் வேட்டையாடிய நிகழ்வும் இந்த தேசத்தையே அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது.
சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துகொண்ட அந்த காவல் ஆய்வாளரை பொதுமக்களும் பத்திரிக்கைகளும்  பெரிதும் போற்றிக் கொண்டாடியிருக்கிறன..
சமூகவலைதளங்களும் ஊடகங்களும் அவர்களின் செயலை பெரிதும் மெச்சியிருக்கின்றன.
குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தூக்கு தண்டனை அறவே ஒழிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகளுக்கும்  மனித உரிமைகள் சார்ந்த இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும்  இந்த நிகழ்வு பெரும்பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான்.
என்னைப்பொறுத்தவரை அந்த குற்றவாளிகளுக்கு தரப்பட்ட தண்டனை சரியானதுதான் என்றாலும்.அதை நிறைவேற்றுகிற  உரிமை ஒரு அரசு ஊழியருக்கு இல்லை என்பதுதான். குற்றவாளிகள் 
தப்பிக்க முயன்றபோது தற்காப்புக்காக சுட்டுக் கொன்றோம் என்ற அவர்களுடைய வாக்குமூலமே அவர்கள் சட்டத்தைத் தாண்டி செயல்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்த்தும்.
இந்த நிகழ்வில் மக்களின் மகத்தான மகிழ்வுக்கும்  ஊடகங்களின் ஒத்திசைவுக்கும் தலையாய காரணம் எதுவாக இருக்க முடியும்.
கடந்த காலங்களில்  தமிழகமெங்கும்  இருண்ட  இரவுகளில் அல்ல ,பட்ட பகல்வெளிகளில் பேரூந்து நிலையம் , ரயில்வே நடைமேடைகள் , ஜனத்திரள்மிக்க கடைவீதிகள் என்று மக்கள் மிகுதியாக நடமாடுகின்ற பல்வேறு இடங்களில் புசிக்கின்ற விலங்குகளை வெட்டி சாய்ப்பது போல் பூப்போன்ற சக மனிதர்கள் வெட்டி  சாய்க்கப்பட்டதை பார்த்திருக்கிறோம்..அதற்கு காரணமான  அத்தனை குற்றவாளிகளும் இன்னமும் வெளியேதான் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர்..அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டாலும் நீதிமன்றங்களில் விசாரணை மாதக்கணக்காக வருடக்கணக்காக நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த மந்த நிலையே மக்களிடம் பெரும் வெறுப்பையும் மிகுந்த சலிப்பையும்  ஏற்படுத்தியிருக்க்கூடும்..
இதற்கு என்ன செய்யலாம்.
வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்குஏற்ற தண்டனையை நிறைவேற்றுவதே வழியாக இருக்க முடியும். அதற்கான முயற்சிகளை ஆந்திர அரசு எடுத்திருக்கிறது.
இதே மாதிரியான ஒரு நிகழ்வைத்தான் மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்  குறுநாவல் பேசுகிறது
கண்ணெதிரே நிழும் ஒரு கொடூரத்தை  கண்டும் காணாமல் கைகட்டி நிற்பவனே கொரைகாரனைவிட கொடியவன் என்று இந்த குறு நாவலில் பேசுகிறர் தண்டாயுதம்..
இந்த நாவலைப்பொறுத்தவரை ஆசிரியர் குறுக்கீடுஅறவே இல்லை.நிகழ்வுகளைச் சொல்லி பெரும்பாலான தகவல்களை வாசகர் சிந்தனைக்கே வழிவகுத்திருக்கிறேன்.

இந்த குறு நாவலின் மூலம் உங்கள் உள்ளங்களை தொட்டுவிட முயன்றிருக்கிறேன். அவ்ளவுதான்..

லிங்கை க்ளிக் செய்யவும். 


மறைமலை 


நகர்ரயில்வே 


ஸ்டேஷன்: குறு நாவல் 


(Tamil Edition) Kindle Edition


Follow the Author

மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்: குறு நாவல் (Tamil Edition) by [g, pandian]

வெள்ளி, ஜனவரி 03, 2020

வெரும் 19 ரூபாய் மட்டுமே. !

2020 ஜனவரி 17

கிண்டில்கவுண்டவுன் டீல்.
மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்.வருகிற 17 ஜனவரி 2020 லிருந்துஇரண்டொரு தினங்களுக்கு விலைகுறைப்பு.
வெரும் 19 ரூபாய்க்கு கிடைக்கிறது
எளிய கருவை மனதிற் கொண்டு உங்கள் உள்ளங்களை தொட்டுவிட முயற்சி செய்திருக்கிறேன். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு படியும் அமாசான் தர வரிசைப்பட்டியலில் அதற்கான இடத்தை நிர்ணயிக்கும். நன்றி நண்பர்களே.

மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்.


வணக்கம் !
இனிய நண்பர்களே ! அமாசான் அறிவித்திருந்த pen to publish 2019 போட்டிக்கான இறுதி நாள் முடிந்திருக்கிறது. அமாசான் தர எந்திரம்  சுழன்று  பொறுக்கி எடுக்கும் மின்நூல்களை இனி இரண்டு எழுத்துலக வல்லுநர்கள் ஆய்வு செய்யப்போகிறார்கள்.இந்தப்போட்டியில் வென்று விடக்கூடுமென்ற பெரும் நம்பிக்கையெல்லாம் என்னிடத்தில் இல்லை.இருந்தாலும் நான் உட்படுத்திய மூன்று புத்தகங்களுக்குமே மதிக்கத்தக்க இடங்களை  நீங்கள் தந்திருப்பது எனக்கு மகிழ்வே. கடந்த இரண்டு மாதங்களில் ஏறதாழ முன்னூற்றுக்கு மேற்பட்ட படிகள் தரவிறக்கப் பட்டிருக்கின்றன..இருந்தாலும் அதற்கான கருத்துரைகள்தான் கிட்டவில்லை.அபரிதமான கருத்துரைகளின் அளவைக் கட்டுப்படுத்த அமாசான் பெரும் கட்டுபாடுகளை விதித்திருப்பது கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் கருத்துரைகளை கையாளுவதில் இருக்கும் சிரமம்.இன்னும் ,என் நண்பர்கள் பலருக்கு இலவசப்பிரதியை தரவிறக்குவதில் கூட பெருங் குழப்பம்.
பரவாயில்லை
மேற்சொன்ன வாய்ப்பை நழுவ  விட்டவர்களுக்கு அமாசான் நிறுவனம் கவுண்டவுன் டீல் என்று வருகிற 17 ஜனவரி 2020 லிருந்து சில நாட்களுக்கு அறிவித்திருக்கிறது. அப்போது மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன் நூலுக்கான விலை ரூபாய் பத்தொன்பது  என்று அறிவித்திருக்கிறது.
இணைய நண்பர்கள்
வேர்கள் வலைதள நண்பர்கள்.
முக நூல் நண்பர்கள்
அத்தனை பேரும் ஒரு படி தரவிறக்க வேண்டுகிறேன். கருத்துரைக்கான அமாசானின் கெடு ஏற்கனவே முடிவடைந்து விட்டாலும் நீங்கள் கருத்துரை இட்டால் நான் மகிழ்வேன். இன்றைய சூழலில் ஒரு புத்தகத்துக்கு நீங்கள் கொடுக்கும் பத்தொன்பது ரூபாய் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. முடிந்தவரையில் புத்தகத்தை வாங்கி மறைமலைநகர் ரயில் நிலையம் புத்தகத்துக்கான இடத்தை நீங்களே நிர்ணயிங்கள்.
நன்றி மீண்டும் வருவேன்.
வில்லவன் கோதை
9884127328
02 ஜனவரி 2020  கீழே காணும் முகவரியை க்ளிக் செய்யுங்கள்.

செவ்வாய், டிசம்பர் 17, 2019

ஒரு வேண்டுகோள் !

வணக்கம்.

அமாசான் அறிவித்திருந்த

pen to publish 2019 க்கான புத்தகவருகை ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.எத்தகய மதிப்பீடுகளை முன் வைத்து அமேசான் தரநிர்ணய எந்திரம் புத்கங்களை வரிசைப்படுத்தப் போகிறதோ விளங்கவில்லைஇறுதி முடிவுகளை இரண்டு எழுத்துலக பழைமையும் புதுமையும் இணைந்து அறிவுக்கக்கூடுமென்று அறிவித்திருக்கிறார்கள்.



பதினாலு வயதிலேயே பத்திரிக்கைகளில் எழுதிய அனுபவம் உண்டென்றாலும் மின்வாரியப்பணி கிடைத்தபிறகு எல்லாம் நின்று போயிற்றுபணியிலிருந்து விடுபட்ட போதுதான் என்னை நான் புதுப்பித்துக் கொண்டேன்.அரசியல் சமூகம் இலக்கியம் சார்ந்த துறைகளில் அடிக்கடி மூக்கை நுழைத்து அவ்வப்போது புனைவுகளையும் எழுதி வந்தேன் இயல்பிலேயேபகுத்தறிவு சார்ந்த எண்ணங்களையும் திராவிட சிந்தனைகளையும் பெற்றிருந்த நான் எப்போதுமே பொழுதைப் போக்குகின்ற எந்த எழுத்தையும் எழுதியதில்லை மூடநம்பிக்கைகளுக்கும் சமூக சிந்தனைக்கெதிரான கருத்துகளுக்கும் செரிவைட்டும் எழுத்துக்கள் என் அடையாளமில்லை..

இந்தப் போட்டிக்காக மூன்று மின்புத்தகங்களை பதிப்பித்திருக்கிறேன்அந்தப்புத்தகங்கள் மூன்றும்  அமேசான் வரிசையில் மணிக்குமணி தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கிறேன்.

எது இப்படி இருந்தாலும் இந்த நகர்வுகள் அத்தனையும் உங்களையன்றி அணுவளவும் அசைந்திடாது என்பது நிச்சயம்.

இந்த புத்தகங்கள் இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏரத்தாழ நூற்றி தொண்ணுற்றைந்துக்கு மேற்பட்ட படிகள் தரவிறக் கப்பட்டிருப்பது பெரிதும் மகிழ்ச்சியே

தரவிறக்கி வாசித்த நண்பர்கள் தங்கள் உள்ளுணர்வுகளை அவசியம் amazon review வில் வெளிப்படுத்த வேண்டும்ஒருபோதும் உங்களிடம் நான் தேவைக்கதிகமான நட்ச்சத்திரங்களை கேட்கமாட்டேன்.ஒன்றுக்குகூட தகுதியற்றதாகத் தோன்றினால் மறுபடியும் மறுபடியும்  உங்களிடம் வருகிறேன்நன்றி.!.

வில்லவன்கோதை பாண்டியன்ஜி)
  1   மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன். குறு நாவல் )
 2  மனப்போக்கு MENTALITY ) சிறு கதைகள் 
  3  எதர்க்காக அழுதான் ? குறு நாவல் )





செவ்வாய், நவம்பர் 26, 2019

ருசித்துப் பாருங்கள் !


மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்.

குறு நாவல்
ஒரு காலத்தில் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழ் நாடு  இப்போது கொலை வெறிக்கூடமாகத் திகழ்கிறது. பொருளாதார விளிம்பை ஏரத்தாழ தொட்டு விட்ட இந்தச் சமூகம் இப்போது மாறுபட்டு சிந்திக்கத் தொடங்கி விட்டதே தலையாய காரணமாகக் கருதுகிறேன்.
மரண தண்டனைக் கெதிராக போராடுகிற ஒரு மனிதனைக் அவன் கண்ணெதிரே காணுகின்ற ஒரு கொடூரம் அவனை மிருகமாக்கி விடுகிறது
இதைத்தான் இந்த குறு நாவல் பேசுகிறது. 
அவசியம் படியுங்கள். உங்கள் உணர்வுகளை
REVIEW ல் வெளிப்படுத்துங்கள்  
கீழே உள்ள நூலின் லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
வில்லவன்கோதை