புதன், ஜூன் 23, 2010

சிங்கம் தப்பியது !


சுறாவைத் தொடர்ந்து உடனடியாக சிங்கம் திரைப்படத்தைக் காணுகின்ற வாய்ப்பு எதிர்பாராமல் நேர்ந்தது. நெல்லைத் தமிழில் சத்யராஜின் மந்திரப்புன்னகை ,விக்ரமின் சாமி — அதனைத் தொடர்ந்து
இப்போது சூர்யாவின் சிங்கம் கர்ஜித்திருக்கிறது. சரிந்து வரும் காவல்துறையின் கவுரவத்துக்கு ஒருவேளை ஊன்று கோல் கொடுத்து உதவியிருப்பார்கள் என்று கருதினேன். ஊழல் நிறைந்த அரசுத்துறைகளில் ஆங்காங்கே நேர்மையாளர்களும் நிறம்ப இருக்கிறார்கள் என்பதை சித்தரித்துக் காட்ட திரைத் துறையினர் தவறி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. கதை நாயகனை உயர்த்த மட்டுமே இத்தகய ஞாயங்கள் அவர்களுக்கு பயன்படுகிறது என்பதை உணர முடிகிறது. சமீபத்திய திரைப்படங்களில் கதையம்சம் என்ற ஒன்று அறவே இல்லாமலிருப்பது கவலைக்குரிய விஷயம்தாம். தொழில் நுட்ப நுணுக்கங்களை கற்றரிந்து வரும் இயக்குநர்கள் திரைப்படத்தை துவக்கும் போது இசை , நடனம் , நகைச்சுவை , மற்றும் சண்டைக் காட்சிகள் அனைத்தையும் வல்லுநர் வசம் ஒப்படைத்து தம் பணியை எளிதாக்கிக் கொள்ளுகின்றனர். அதே சமயம் ஒரு வெற்றித் திரைப்படத்துக்கு எலும்பாகத் திகழும் கதையம்சத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நகைச்சுவைக் காட்சிகள் கூட தேவையான சம்பவப் பின்னணி அமையாத போது பெருவாரியாக வெற்றி பெருவதில்லை. நல்ல கதையை தேடுவதைத் தவிற்து தாமே பண்ணிக் கொள்ளலாம் (எழுதிக் கொள்ளலாம் அல்ல ) என்ற அலட்சிய உணர்வே இன்று திரைத்துறையில் காண முடிகிறது. கதைக்கான நாயகியை கோவில் குளங்களெங்கும் தேடியலையும் இயக்குனர்கள் திரைக்கதைக்கென சிறிதும் முயற்சிப்பதில்லை. இப்படித்தான் சிங்கம் திரைப்படத்திலும் இயக்குநர் ஹரி கதை பண்ணியிருக்கிறார்.
சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மிகப் பெரிய தாதாவாக செயல்படும மயில் வாகனம் ( பிரகாஷ் ராஜ் ) அடுக்கு மாடி கட்டிடங்களை எழுப்பும் செல்வந்தர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் தொழில் செய்பவன். அவ்வப்போது ஆட்களை க் கடத்தி லட்சம் லட்சமாக பணம் பிடுங்குபவன். எதிர் பாராத விதமாக வழக்கு ஒன்றில் சிக்கி ஜாமீனில் வெளிவருகிறான். தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் தூத்தூகுடிச் சீமையில் உள்ள சின்னஞ் சிறிய நல்லூர் கிராமத்தில் மாதமொருமுறை நேரில் சென்று கையெழுத்திட பணிக்கிறது நீதிமன்றம்.
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் நிறம்பப் பெற்ற காவல் துறை ஆய்வாளர் துரைசிங்கம் சொந்த மண்ணில் மிகுந்த செல்வாக்கோடு பணி செய்பவர். துவக்கத்திலேயே மயில்வாகனன் துரைசிங்கத்திடம் அவமானப்பட நேருகிறது.சினமுற்ற மயில் வாகனன் துரைசிங்கத்தை சொந்த மண்ணான சென்னைக்கு மாற்றல் ஏற்பாடு செய்கிறான்.சிங்கமும் சென்னை சென்று மயில்வாகனனை வென்று சொந்த மண்ணுக்கு திரும்புகிறான். கதையை நகர்த்த ஒரு நாயகியும் ஒரு நகைச்சுவை நாயகனும் இடம் பெருகிறார்கள்
இருப்பினும் -
இத்திரைப்படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை ஒவ்வொருவரும் திறனுடன் செய்திருக்கின்றனர். பழம்பெரும் நடிகர்கள் நிறம்ப காணப்பட்டாலும் சூரியா , விவேக் , அனுக்ஷா , பிரகாஷ் ராஜ் ஆகிய நால்வரும் அனைவரையும் நகர்த்தி திரையில்
முன்னிற்கினறனர். நெல்லைத் தமிழை முழுதுமின்றி ஆங்கங்கே நிறப்பியிருக்கின்றனர். சூரியாவின் நடிப்பு இயல்பாகவே அமைந்திருக்கிறது.ஆங்காங்கே அவர் பேசும் நீண்ட வசனங்கள் சலிப்பூட்டத் தகுந்தது.நாயகி அனுக்ஷாவின் நடிப்பு பாராட்டும்படி அமைந்திருக்கிறது.பிரகாஷ் ராஜ் தன் பாணியை மாற்றிக்கொள்வது நல்லது. வில்லனாய் நுழைந்து காமெடியனாய் கரை சேர்ந்த நடிகர் அசோகனை எண்ணிப் பார்ப்பது அவருக்கு நல்லது. இடையே சிறிது காலம் தொய்வுற்று காணப்பட்ட விவேக் இபபடத்தில் நினைவில் நிற்க முயலுகிறார். சமீப காலத்தில் மத்திய அரசின் சிறப்பு விருதையும் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியையும் பெற்ற விவேக் விரசமான வசனங்களைத் தொடர்வது நலலதல்ல என்று வேர்கள் கருதுகிறது. இன்றைய சூழலில் அரசியலில் ஒரு நேர்மையாளனாகத் தோன்றி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாகுகிறார் விஜயகுமார். பாடல்கள் , தேவிப்பிரசாத்தின் இசை திருப்ப்பியளிக்க வில்லை.
பிரமிக்கத்தக்க சண்டைக் காட்சிகள் — இடையிடையே ஒட்டப்பெற்ற நடனக் காட்சிகள் — விரசம் மிகுந்த நகைச்சுவை — தேவையற்ற நீண்ட வசனங்கள் , இவைகளுக்கிடையே உள்ள கோடுகளை இணைத்து திரைக்கதையை அனுமானிக்க ரசிகர்களிடையே விட்டு விடுகிறார்கள். இதுவே திரைப்படம் தொய்வின்றி நகர்வதற்கு உதவியிருக்கூடும்.
சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கலாம்.
——————————————————-
இடுகை 0020
சென்னையிலிருந்து..
பாண்டியன்ஜி.

1 கருத்து:

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !