வியாழன், ஜூன் 10, 2010

திருக்கடையூரில் நிகழ்ந்த திருமணம்

                                
         ( என்னுடைய 26 வது இடுகை என் வாழ்வில் தூணாகவும் துணையாகவும் விளங்கியவர்களைப்பற்றியது. வலைப்பூ நண்பர்கள் விரும்பினால் எனக்கும் மகிழ்வே ! )
                                                        பாண்டியன்ஜி

                                              எனக்கு மணமாகி முப்பத்தெட்டு வருடங்கள் என்னை விட்டு வெகு விரைவாக ஓடிப்போய்விட்டதை உணர்கிறேன் . அப்போது எனக்கு அறிமுகமான எனது மைத்துநர் திரு அ . இராமதாஸ் அவர்களின் உறவு என்னைப்பொருத்தவரை அரிதானதொன்றாகவே கருதுகிறேன். கடந்த 6 ஜுன் 2010 - ல் 60 வது வயதினை நிறைவு செய்திருக்கிறார் என்ற செய்தி என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் நகரில் தன் செய்கைகள் மூலம் அனைவர் மனதிலும் இடம்பெற்றிருந்த ஆடுதுறை        திரு c. a . அண்ணாமலை அவர்களின் புதல்வர்தாம் தி ரு அ . இராமதாஸ் . மருத்துவ வணிகத்தில் தஞ்சை மாவட்டத்திலேயே பெரிதும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.


   திருப்பனந்தாள் , பந்தணைநல்லூர் , கோணுளாம்பள்ளம் , மற்றும் சோழபுரம்   ( உமா மெடிக்கல் ஹால் )ஆகிய கிராமங்களில் மருந்து விற்பனையை ஒருசேரத் துவக்கி சாதனையை நிகழ்த்தியவர். அவரிடம் பயிற்சியுற்றோர் இன்று தனித்தனி கிளைகளாக ஒளிவிடுவதைக் காணலாம். இன்றுவரை அன்போடு பழகும் இனிய சுபாவம்,
தொய்வுற்றபோது கைகொடுக்கும் மன உறுதி நான் என்றும் மறவாதவை. அவருக்கு துணையாக அமைந்த திருமதி ரேணுகா இவருக்கொன்றும்
சளைத்தவரல்ல. உறவுகளையும் நட்புகளையும் ஒருசேர உபசரிப்பதில் என்றுமே நினைவில் நிற்பவர். இருவருமே வாழ்வின் எழுச்சிமிக்க நாட்களையும் வீழ்ச்சி நிறைந்த நாட்களையும் ஒருசேர சந்தித்தவர்கள்.
இவர்களது 60 வது அகவை நிறைவு மணவிழா கடந்த     06 ஜுன் 2010 - ல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன்
சன்னதியில் சிறப்புடன் நிகழ்வுற்றது. நோயற்ற நீண்ட நல்வாழ்வு இவர்கள் பெருவார்கள் என்று நம்புகிறேன். வாழ்வின் இறக்கமான தருணங்களில்
எதிர்படும் இன்னல்களைத் எளிதில் தாங்க தேவையான மன உறுதியையும் உற்சாகத்தையும் இவர்கள் பெருவார்கள் என்று நம்புகிறேன்.
இப்படியொரு
உறவு மீண்டும் மீண்டும் பெறவே ஆசை
------------------------------------------------------------------------------ .
பாண்டியன்ஜி
இடுகை 0016   10 ஜுன் 2010
-------------------------------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. It is very very super you have told about your brother-in-law's 60th marriage it was very fine

    பதிலளிநீக்கு
  2. அவர்களுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அய்யா. நீங்களும் அவர்களும் நீடுழி வாழ அந்த திருக்கடையூர் அபிராமி அருள் புரிவார்

    பதிலளிநீக்கு
  3. கவிஞனின் வாழ்த்து தொலைநோக்கு இலக்குடையது !
    மிக்க நன்றி!
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !