புதன், டிசம்பர் 30, 2009

தமிழ்ப்புத்தாண்டு 2041

தமிழ்ப்புத்தாண்டு 2041
2010 ஜனவரி 14 ….!
புதிய தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து எதிரும் புதிருமான கருத்துக்கள் ஒலிக்கதொடங்கிருக்கின்றன. புதிய அறிவிப்பிற்கான தேவையை விடுத்து மாற்றியவரின் பின்னணியை மனதில் கொண்டு குரல்கள் எழும்பி ஒலிக்கின்றன.
எந்த ஒரு நிகழ்வுக்கும் இரண்டுவித எண்ணங்கள் இருப்பது உண்மையே. இருப்பினும் உலகில் தோன்றியுள்ள அனைத்து உயிரினங்களிலும் தலையாயது மனித பிறவியே என்று கூறிகொண்டிருக்கிறோம். இலைகளையும் தழைகளையும் தரித்துகொண்டிருந்த மனிதன் இன்று அனைத்து துறை மாற்றங்களுக்கு ஊன்றுகோலாயிருக்கிறான்.ஆனால் மற்ற உயிரினங்கள் தங்கள் நிலைகளை மாற்றிகொண்டதில்லை. அதுமட்டுமே மனித இனத்தின் மகத்தான சிறப்பாகும்.
இந்த மாற்றத்தை தமிழக அரசு மட்டுமே தன்னிச்சையாக அறிவித்துவிடவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.இந்த மாற்றம் தேவைதானா என்பதை சிந்திக்கின்ற பொறுப்பு யாருக்கு உண்டு ? தமிழனாய் பிறந்தவனுக்கும் தமிழாய்ந்த தலைவர்களுக்கும் மட்டுமே உண்டு.மாற்றத்தை வேண்டிய அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை சட்டமாக்கி தந்த முதல்வருக்கு நன்றி பாரர்ட்டியதையும் கவனிக்க வேண்டும்.இந்த மாற்றத்துக்கு தேவையான காரணங்களையும் ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.இருப்பினும் இவையனைத்தும் தேவையான அளவிற்கு மக்களை சென்றடையவில்லை என்றே கருதுகிறேன்.
இவையனைத்தையும் தள்ளி விட்டு வழி வழியாய் இப்படித்தான் வாழ்ந்தோம் என்பவர்கள் மனதிற் கொள்ளவேண்டும்.முன்னதாக அச்சுவசதிக்காக தந்தை பெரியார் தமிழ் எழுத்தில் செய்த மாற்றத்தை இறுதிவரை அவரால்மட்டுமே செயல்படுத்தமுடிந்தது.இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்லப்பட்ட தி மு க கூட மாற்றத்தை ஏற்றுகொள்ளவில்லை.ஆனால் புரட்சி நடிகர் கையெழுத்திட்ட சட்டம் ஒரே நாளில் தமிழ் எழுத்துக்களின் தலையெழுத்தையே மாற்றிவிட்டதை நாம் அறிவோம்..எனவே வீம்புக்கு குரல கொடுப்போர் தங்களோடு தங்கள் வழிபாடு முடிவுறும் என்பதை உணரவேண்டும்.
மலர்ந்த முகத்தோடு புதிய புத்தாண்டை தை திங்களில் எதிர்கொள்ளுவோம
இடுகை 0002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !