வெள்ளி, ஜனவரி 01, 2010

33 வது சென்னை புத்தக கண்காட்சி

சென்னை பச்சையப்பன் கல்லுரிஎதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி மைதானத்தில்
33 வது சென்னை புத்தக கண்காட்சி மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது. 500 க்கு மேற்பட்ட நிருவனங்கள் அரங்குகளில்இடம்பெற்றிருக்கிறார்கள் . மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும் அரங்குகளை காணும்போது நல்ல நம்பிக்கை நெஞ்சில் துளிர் விடுகிறது.பெருகிவரும் கணனி வளர்ச்சியும் சின்ன திரையின் ஆளுமையும் நம்மிடையே படிக்கும் பழக்கத்தை பறித்திடுமோ என்ற ஐயம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இன்றைய தலைமுறையிடையே சென்றடைய வேண்டிய செய்திகளை அச்சு வடிவில் மட்டுமின்றி ஒலி ஒளி வடிவங்களிலும் பல பதிப்பகங்கள் கொடுத்திருக்கிறன.
கடந்த 30-12 -2009 அன்று இந்த சந்தையை துவக்கி வைத்த தமிழக முதல்வர் கலைஞர் இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகங்களுக்கான விருதை 29 புத்தகங்களுக்கும் அதனை பதிப்பித்த 20 பதிப்பகங்களுக்கும் அறிவித்தார்.   தினம் தினம் வித்தியாசமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவுறும் சந்தை வருகிற 10-01-2010 வரை நிகழ இருக்கிறது.
ஒரு கணம் எண்ணிப்பாற்கிறேன்.
ஏற தாழ 1966 – 67 களில் பத்து பதினைந்து பதிப்பகத்தார் இணைந்து துவக்கிய இந்த முயற்சி எத்தனை அசுற வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்த புத்தக சந்தை மேலும் மேலும் விழுது பரப்பி வளர்ச்சியடைய வேர்கள் வாழ்த்துகிறது

இடுகை 0003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !