சனி, ஜனவரி 02, 2010

புதுவருடம் 2010

இனிய தமிழ் ெஞ்சங்களே !
புதுவருடம் 2010 க்கு வழி விட்டு 2009 விலகி கொண்டிருக்கிறது . இளய தலைமுறைக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்து விலகிநின்று வேடிக்கை பார்க்கும் முதிய தலைமுறையை போல .
2010- ன் முதல் படியில் நிற்கும் நாம் ஒரு கணம் கடந்து வந்த 2009 திரும்பி பார்த்திடுவோம் .சாதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2009ன் சில நினைவுகளை அசைபோடுவோம் . ஏறத் தாழ ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு தமிழக சட்டசபையில் அனுமதி.
விடுதலைபுலிகளிடமிருந்து கிளிநொச்சி , முல்லைதீவு பகுதிகளை இலங்கை ராணுவம் கைபற்றியது.
ஸ்லம் டாக் மிலியனர் திரைபடத்துக்கு கோல்டன் குளோப் மற்றும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் ஏ.ஆர் ரஹ்மான்
சத்யம் கம்யூட்டர்ஸ் ராமலிங்கராஜூவின் ஊழல் உலகெங்கும் எதிரொலித்தது.
தமிழகத்தில் நிகழ்ந்த இடைதேர்தல்களில் தி மு க வெற்றிபெற்றது.
சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு ஏற்றது.
இலங்கை தமிழர் படுகொலையை எதிர்த்து மூன்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் தீக்குளிப்பு .
முன்னாள் மத்தியதொலை தொடர்புத்துறை மந்திரி சுக்ராமுக்கு ஊழல் வழக்கில் மூன்றாண்டு சிறை.
விண்வெளியில் ரஷ்ய அமெரிக்க செயற்கை கோள்கள் மோதின.
சிறுகதை மன்னன் ஜெயகாந்தனுக்கு பத்ம ஸ்ரீ விருது
அமெரிக்கவிண்வெளி ஓடம் டிஸ்கவரி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தேசத்தந்தை காந்தி பயன்படுத்திய கடிகாரம் கண்ணாடி,தட்டு,குவளை மற்றும் செருப்பு போன்றவை லண்டனில் ஏலம் விடபட்டது.விஜய்மல்லையா 9.3 கோடிக்கு ஏலம் எடுத்து மானம் காத்தார்.
டாடா நிருவனம் ஒரு லட்சம் விலையுள்ள நானோ காரை வெளியிட்டது.
தமிழக துணைமுதல்வராக ஸ்டாலின் நியமனம்.
இந்தியாவின் பதினைந்தாவது மக்களவை தேர்தல் முடிவுகள் .காங்கிரஸ கூட்டணி 261 இடங்களை கைபற்றியது.
இந்திய பிரதமராக மன்மோகன் சிங் மீண்டும் பதவிஏற்பு.
ஈழ போரில் பிரபாகரன் மரணம்.இலங்கை வெற்றி.
வட கொரியா சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
பாபர் மசூதி இடிப்பு – லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல்.
அனைத்து மதத்தினரும் திருமணத்தை பதிவு சொய்ய தமிழகரசு சட்டம்.
தனிதெலுங்கானா கோரி ஆந்திராவில் கலவரம்.
வேதாரண்யம் அருகே பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து ஒரு ஆசிரியை,9 குழந்தைகள் பலி.
ஆறு குட்டி ஏவுகணைகளுடன் ஓசியன் சாட் விண்ணில் விரைந்தது.
நிலவில் நீர் இருப்பதற்கான சான்றுகளை சந்ராயன் கண்டறிந்தது.
காஞ்சியில் அண்ணா நூற்றாண்டு கொண்டாட்டம் நிகழ்வுற்றது.
தேக்கடியில் படகு கவிழ்ந்து 45 பேர் பலி.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி ஒபாமா பதவிஏற்பு.
மன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து. விமானத்தில் பயணம் செய்த ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி ஐந்து பேருடன் பலி
அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு கிடைத்தது.
சிறந்த நாவலுக்கான புக்கர் பரிசு பிரிட்டனை சேர்ந்த ஹிலாரி மான்டொல்லுக்கு கிடைத்தது
இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு தமிழகத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கிடைத்தது.
பாப் இசை கலைஞன் மைக்கேல் ஜாக்ஸன் மாரடைப்பால் மரணம்.
தொடர் மழையால் நீலகிரியில் பேரழிவு.
வேர்கள் யாவருக்கும் நல் வாழ்த்துக்களை பதிவுசெய்கிறது
இடுகை 0004

2 கருத்துகள்:

  1. 2009 ம் ஆண்டின் நிகழ்வுகளின் ஒரு அருமையான சிறு தொகுப்பு. நல்ல இடுகை

    பதிலளிநீக்கு
  2. மதிப்பிற்குரிய சரஸ்வதன் தாங்கட்கு
    தங்கள் மறுமொழி மகிழ்ச்சியளிக்கிறது.அந்நாளில் கண்ணனையும் கலைமகளையும் படித்தது இன்றைய எழுத்துக்களில் காணமுடிகிறது.
    இனிய....பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !