செவ்வாய், ஜூன் 08, 2010

தமிழக அரசின் திருமண பதிவுச் சட்டம்

தமிழக அரசின் திருமண பதிவுச் சட்டம் – ஒரு பார்வை
கெள-டில்யன்
அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும் என்று தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது..சமூகத்தில் பெண்களுக்காக குரல் கொடுப்போர் உவகை கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.இருப்பினும் வழக்கம்போல மாறுபட்ட கருத்துகளும் எழுந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.இந்தியா போன்ற மிகப்பெரிய சனநாயக நாடுகளில் இவையெல்லாம் சாதாரணமானதுதான்.தமிழக அரசுஇயற்றியிருக்கும் புதிய திருமணச்சட்டம் தற்கால மணவாழ்க்கையில் ஊடுருவியிருக்கும் குளருபடிகளை களைய உதவும் என்று நம்பலாம்.இதன் மூலம் பொதுவாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தீர்வு கிடைக்கலாம்.இந்த சட்டத்தை பொருத்தவரை சிறுபான்மை சமுதாயம் என்ற நிலையில் இருக்கும் முஸ்லிம் இனத்திலிருந்துதான் பெருவாரியான€ குரல்களை கேட்க முடிகிறது.எத்தனையோ கண்மூடி பழக்கங்கள் அனைத்தும் காலவெள்ளத்தில் இனம் மதம் மொழி என்ற தடைகளைத்தாண்டி மண் மூடிப்போயிருக்கின்றன.இந்த மண்ணில் வாழ்வதற்கும் உலகின் பிறபகுதிகளில் பிழைப்பதற்கும் ஏற்ற மொழியினை ஏற்றுகொண்டிருக்கிறோம்.தங்கள் மத மறபுகளை பெருமளவு புறக்கணிக்காத,அனைத்து இனங்களுக்கும் ஊன்று கோலாயிருக்கிற சட்டங்களை ஏற்று கொள்ளுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
கட்டாய திருமண பதிவுச்சட்டத்துக்கெதிராக குரல் கொடுப்போர் கூறுவதென்ன.?
முஸ்லிம் ஜமாத்துகளில் 90 விழுக்காடு திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்படுகிறது.இந்த புதிய சட்டம் ஜமாத்துகளின் செயலை உருக்குலைத்துவிடும்.ஊழலும் லஞ்சமும் ஊரிக்கிடக்கும் அரசு அலுவலகங்கள் வசம் இந்த சட்டம் போகுமானால் பெருமளவு பணச் செலவும் காலவிரையமுமே மிஞ்சும்.

இடுகை 0015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !