ஞாயிறு, ஜூன் 20, 2010

தந்தை பெரியாரின் மொழிச் சீரமைப்பு



தந்தை பெரியாரின் மொழிச் சீரமைப்பு
——————————————
(   16 பதிவு பற்றிய குறிப்புரை )
உலகிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ப்பட்ட ஒரே சரியான தலைவர் தந்தை பெரியார் என்று மதிப்பிற்குறிய 
சுப . வீரபாண்டியன் குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன்.
மிக மிக சரியான கணிப்பு என்றே கருதுகிறேன்.
தந்தை பெரியாரை கடவுள் மறுப்புத் தலைவர் என்று மட்டுமே நம்மில் பலர் எண்ணியிருப்பதை மறுக்க இயலாது. அவருடைய பல் வேறு பரிமாணங்களை இந்த சமுதாயம் சரிவர உணரப்படவில்லை என்பதே உண்மை.தந்தை பெரியார் விட்டுச்சென்ற எழுத்துக் குவியல்கள் தமிழர் தம் வேதம் என்பதை உணரவேண்டும். பெரியாரின் கூற்றுகளை மறுப்பவர்கள் எவரும் அவர்தம் கருத்துகளை முழுமையாக அணுகாமல் தாறு மாறாகவே விமர்சனம் செய்து வந்திருக்கிறார்கள். இந்திய துணைக்கண்டத்தில் வேறு எந்த மாநிலத்திலும் நிகழாத சமீக நீதிக்கான புரட்ச்சி தமிழகத்தில் மட்டுமே நிகழ்ந்ததற்கு தந்தை பெரியாரே தலையாய காரணம். தமிழன் இன்று தலை நிமிர்ந்து நடப்பதற்கு அவரின் அயராத பணி என்பதை இன்றைய இளைய தலைமுறை உணர வேண்டும்.அவர் விட்டுச் சென்ற ஏராளமான சிந்தனைகளை முழுமையாக படித்துணர வேண்டும்.
அவருடைய மொழிச் சீர்திருத்தம் பற்றிய குடந்தை கல்லூரி பேருரையை சில நாட்களுக்கு முன் படிக்க நேர்ந்து வியப்புற்றேன்.அவர் காலங்களில்
நிகழ்த்தி வந்த பல் வேறு போராட்டங்களுக்கிடையே அவருக்கிருந்த மொழி பற்றிய ஆய்வு அவர்பால் எனக்கிருந்த பற்றுமேலும் இறுகச் செய்தது. ஏற தாழ 50 , 60 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி ஒரு சிந்தனை.
எனக்கேற்பட்ட இந்த இனிய அதிற்சியை என் வலைபூ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அவர் குரலை வேர்களில் பதிவு செய்தேன். அதுவன்றி
யாரோ எழுதிக் குவித்த குப்பைகளை வேர்களின் காலி இடங்களை நிறப்ப முயலவில்லை.
மொழிச்சீர்திருத்தம் குறித்து பரவலாக பேசப்படும் இன்நாளில் 50 , 60 வருடங்களுக்கு முன் என்றோ தூவப்பெற்ற விதை பயனளிக்கும் என்று கருதுகிறேன்.
——————————————————–
மதிப்பற்குறிய திரு dr. n .கணேசன் அவர்களுடைய பார்வை ( பின்னூட்டம் ) என் செயலுக்கு மேலும் உரமிடுவதை உணர்கிறேன்.மிக்க நன்றி .
பாண்டியன்ஜி
இடுகை 0019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !