செவ்வாய், மார்ச் 29, 2011

ழ பதிப்பகமும் நூல் வெளியீடும் ! verhal

பாண்டியன்ஜி
கடந்த ஞாயிற்றுக்கிழமை
 ( 27 - 03 - 2011 ) மாலை ஆறு மணி !
கே.கே நகர் முனுசாமி சாலை மையத்திலிருந்த டிஸ்கவரி புத்தகநிலையத்தில் " ழ" பதிப்பகம் புதிய நான்கு புத்தகங்களை வெளியிட்டு பதிவுலக சிற்பிகளுக்கு ஊக்கமளித்தது. புத்தகநிலையம் தாங்கக்கூடி அளவுக்கு சென்னைப்பதிவர்கள் கூடிய அந்த விழா சிக்கனமாக நிகழ்ந்தேரியது. இதர்க்கான அழைப்பை பதிவுலக நண்பர் திரு கே.ஆர்.பி செந்தில் முன்னதாகவே அனுப்பியிருந்தார்.
சென்ற வருடத்தில் ஒரு நாள் இரவு வேர்கள் முத்திரையோடு பதிவுலகில் தடம் பதித்தபோது பரந்து கிடந்த இணையத்தில் நானும் திரும்பிப் பாற்கப்படுவேன் என்று தோன்றியதில்லை.வழக்கம் போல பலனை நோக்காது ஒரு பயணச்செய்தியை பதிவு செய்தபோது அடுத்த நாள் வியப்பூட்டும் மூன்று மறு மொழிகள் காத்திருந்தன.திரு ராம்ஜி ,திரு தெகா ( thekkiattan ) ,திரு கே.ஆர்.பி செந்தில் என்ற மூவரில் இந்த விழாவின்மூலம் கே ஆர் பி செந்திலைக் காண முடிந்தது. மற்ற இருவரையும் வரும் நாளில் சந்திக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.பதிவுலகில் பழகுவதற்கு எத்தனை இதமானவர் கே ஆர் பி செந்தில் என்பதை அங்கே உரையாற்றிய
நண்பர்கள் மூலமாக அறியமுடிந்தது.அவர் அவ்வப்போது எழுதிய நிதி சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பான பணம் என்ற நூலை எனக்கு முன்னதாகவே
அறிமுகமாகியிருந்த அகநாழிகை வாசுதேவன் வெளியிட திரு முத்து பெற்றுக்கொண்டார்.அதைப்போல பழம்பெரும் பதிவர் கேபிள் சங்கர் எழுதிய கொத்து பரோட்டா என்ற நூலை திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு சதீஷ் வெளியிட்டார்.அயல் நாடு வாழும் தமிழரான திரு என்.உலகநாதன் எழுதிய.
வீணையடி நீ எனக்கு , சாமான்யனின் கதை..என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன.


விழாவைத்துவக்கி வைத்து உரையாற்றிய பதிப்பாளர் திரு ஒ.ஆர்.பி ராஜா எழுத்துலகில் காலடி வைக்கும் பதிவர்களுக்கு படி அமைத்துக் கொடுப்பதே ழ பதிப்பகத்தின் நோக்கமென்றார்.வணிககம் வுக்கு அடுத்த நிலைதான் என்றும் விளக்கினார். அதே சமயம் என் நினைவுகள் பெரிதும் பின்னோக்கிப் பாய்ந்தது. என் தலைமுறையிலேயே எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எண்ணங்களை எதிரொலிக்க, சிறுகதை புதினங்களை படைக்க சாதிச்சான்றும் சமய சிபாரிசும் அல்லவா அன்னாளில் தேவையாயிருந்தது.கல்கியிலும் விகடனிலும் இவையன்றி எவரேனும் எழுதமுடியுமோ.?
இன்று அத்தனையும் எளிதாகக் கிடைக்கிறது.
படைப்பாளிகளும் பதிப்பாளிகளும் யோசிக்க வேண்டும். தரமான எழுத்துக்களுக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டும்.இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் ஒரு சில பதிவர்கள் அறிமுகம் சாத்தியமாயிற்று நகைச்சுவை தவழ எழுத முயற்சிக்கும் வலைமனை சு-சாமிநாதன் பரமசாதுவாக நடந்து கொண்டது வியப்பைத் தந்தது.   நூல்களின் அட்டையை ஆக்கியவர் அவர்தானாம்.
( நூல்கள பற்றிய எண்ணங்களை பினபு பகிர்ந்து கொள்ளுகிறேன். )
----------------------------------
இடுகை 0047 .



1 கருத்து:

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !