வெள்ளி, ஏப்ரல் 29, 2011

பாவேந்தருக்கு பிறந்த நாள் !


புரட்சி கவிஞர் பாரதிதாசன்
( 29 . 04 . 1891 -- 21 . 04 . 1964 )
புரட்சிக்கவிஞரின் பாடல்களை படிக்கும்போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன. உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது. படிக்கின்றோம் , பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல ; காலத்தையே மாற்றியமைப்பவர் ; புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம்கவிஞர் உயர்கவி , உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி , எளிய மக்களின் தசையையும் பிய்க்கும்படியான புரட்சிக்கவிஞரின் புதுக்கவிதைகளைப் படிக்க வேண்டும் , பாட வேண்டும் , பயன் பெற வேண்டும் ; புதுக் கவிதைகளைப் புரட்சிக்கவி போல் பாடிட முன் வரவேண்டும் .
                                                         ---  பேரறிஞர் அண்ணா 1945
இடுகை 0051

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !