வியாழன், ஜனவரி 15, 2015

தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் !

தமிழ்ப்புத்தாண்டு !  நல் வாழ்த்துக்கள் !      (வள்ளுவராண்டு 2046 )

தைத்திங்கள் முதன்நாளை தமிழர்தம் புத்தாண்டு தினமாக கொண்டாடும் தமிழ் உணர்வாளர்கட்கு வேர்கள் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தொள்ளாயிரத்து இருபத்தியொன்றில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்  ஆய்ந்தெடுத்த தமிழர்தம் புத்தாண்டு தினத்தை தக்க சான்றுகளோடு நிறுவ  தமிழறிஞர்கள் குழுவொன்றை ஏற்படுத்தினார்.
தமிழ்த்தென்றல் திரு வி கல்யாணசுந்தரம்
தமிழ்க்காவலர் திரு கே. சுப்ரமணியம்பிள்ளை
சைவப்பெரியார்  திரு  சச்சிதானந்தம் பிள்ளை
நாவலர் சோமசுந்தர பாரதியார்
நாவலர்   திரு என் . எம்  வெங்கடசாமி நாட்டார்
முத்தமிழ்க்காவலர்   திரு   கே ஏ பி விஸ்வநாதம்  
போன்ற அன்னை தமிழ்பால் ஆர்வம் கொண்ட பேரறிஞர்கள் ஒன்றுகூடி  தைத்திங்கள் முதன்நாளே தமிழர் புத்தாண்டு ஆரம்பம்  என்றறிவித்தனர். தமிழர்தம்  வாழ்வையும் வழியையும் நிர்ணயிக்க வேறு எவரையும் விட எம் தமிழ் அறிஞர்க்கே முதலுரிமை உண்டென்று என்று கருதுகிறேன்.
வருடாவருடம் பல்வேறு விளக்கங்களை தந்தபின்பும்   சித்திரை முதன் நாள்தான்  தமிழ்ப் புத்தாண்டு என்று வீம்பு பேசுவோர் உரிமையில் வேர்கள் குறுக்கிட விரும்பவில்லை.
காலம் தக்க பதில் கூரட்டும்.
தமிழர்வாழும் இந்த மண்ணுக்கு தமிழ் நாடென்ற பெயர் சூட்டவே எத்தனையெத்தனை போர்களை நிகழ்த்த வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் ஒவ்வொரு உரிமையையும் வென்றெடுக்க எத்தனையத்தனை தடைக்கற்கள்.
ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் ! பொழுது விடிகிறபோது விடியட்டும் !

பாண்டியன்ஜி
15 01 2015


சென்னை 603 209

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !