ஞாயிறு, ஜூலை 04, 2010

வன்னியடியில் ஒரு சந்திப்பு !

             ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன் தமிழ் நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று இன்று பல்வேறு திசைகளில் வாழ்ந்து வரும்  ஆறு நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி  மகிழ்ந்திட எண்ணியபோது  இனிய நண்பர் ஜெகநாதன்  அந்த சந்திப்பை இங்கேயே   வைத்துக் கொள்ளலாமே ' என்று அன்போடு அழைக்க  மூலைக்கு ஒருவராய் பிரிந்து வாழும் நாங்கள்  29  ,  30  ஜுன்  2010  ல்  தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சார்ந்த வன்னியடி கிராமத்தில் அந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்தோம்.
              முன்பே நிச்சியித்தபடி    ஜுன்   29   காலை கும்பகோணம் பேரூந்து நிலையத்தில்  நான் இறங்கியபோது   திருவாரூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த  நண்பர் குமரசாமி  என்னோடு இணைந்து கொண்டார்.
           கும்பகோணத்திலிருந்து தஞ்சை  நெடுஞ்சாலையில்  ஒரு பத்து கிலோ மீட்டரில் குறுக்கிடும் பாபநாசத்தில் இறங்கினால் எல்லாருக்கும் அறிமுகமான  புளியமரத்து தேநீர் கடை எதிர்படும். அதன்  அருகில் வடக்கு நோக்கி திரும்பி  நீண்டு கிடக்கும் தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் கடக்கும் போது  காவிரியின் கிளை நதி அரசலாற்றையும் அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும்  நீண்ட நவீன பாலத்தையும் பார்க்கலாம். ஆற்றின் தென்கரையில் மேற்கு நோக்கிசெல்லும் குறுகிய தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் தாண்டி தென்திசையில் இறங்கி அரை கிலோமீட்டர் பயணித்தால் பசுமைப்பிரதேசம் வன்னியடியை அடையலாம். 
                         நாங்கள்  வன்னியடியில் நுழைந்த போது எதிரே  குறுக்கிட்ட அரசு உயர் நிலைப் பள்ளியில் அத்தனை சிறார்களும் சீருடையில் வரிசையாக அணிவகுத்து இசைக்கின்ற நீராரும் கடலுடுத்த ...தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளியின் இயல்பான துவக்கத்தை வெளிப்படுத்துகிறதுதாமதமாக வர நேரிட்ட  ஒரு சில சிறுவர்கள்   ஒருவித இனம்புரியாத  அச்சத்தோடு கம்பிக் கதவுகளுக்கருகில்  ஒதுங்கி நிற்பதையும் காணமுடிகிறதுஇரண்டு மூன்று குறுக்குத்தெருக்களை கடந்து  நண்பர் ஜெகன்நாதன் வீட்டை  நாங்கள் அடைந்தபோது  எங்களுக்கு அன்பான வரவேற்பு  நிகழ்ந்தது.  ஜெகன்நாதன் எங்களுக்காக ஒதுக்கியிருந்த வீடொன்றில்  முன்னதாகவே வந்திருந்த   நண்பர்களை நீண்டநாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க முடிந்தது.நண்பர் வேதசிரோன்மணி சென்னையிலிருந்து புகைவண்டியிலும் ஈரோட்டிலிருந்து தங்கவேலுவும் பழனிச்சாமியும் மாருதி ஸ்விப்ட்டிலும் முன்னதாகவே வந்திருந்தனர்.  அறுபத்தி எட்டுகளில் ஈரோடு பிரப் சாலையில் கலைமகள் விடுதியில் ஏற்பட்ட பிணைப்பு ஒவ்வொருவரும் மின்வாரியத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்தாம்பணிக்காலங்களில் முக்கியமாக காலந்தவறாமை , கிடைத்த பணியில் உள்ளார்ந்த ஈடுபாடு ஞாயமான ஊதியம்  இவைமட்டுமே  உயர்வாக கருதியவர்கள்இன்று துறைதோரும் மலிந்து கிடக்கும் ஊழலில் இருந்து பெரிதும் ஒதுங்கியிருந்தவர்கள் 
                     ஈரோடு நகரிலிருந்து  நண்பர் தங்கவேலு வந்திருந்தது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியளித்தது.  அறுபத்தெட்டுகளில்  ஈரோட்டில் பணியில் இணைந்தபோது நான் பெற்ற நட்பு அதுநீறுபூத்த நெருப்பாக ஆண்டாண்டுகளாய் தொடர்வது நான் பெற்ற பேறேயாகும்பார்ப்பதற்கு மா நிறம் , சராசரியான உயரம் எப்போதும் பளிச்சென்று காணப்படும் தெளிவான கோவை வாசிகளுக்கே உரித்தான முகத்தோற்றம். இடையிடையே எப்போதாவது லேசாக குறுக்கிடும் கோவைத்தமிழ்  - இவைதான் ஈரோட்டைச்சேர்ந்த தங்கவேலு
                  எதிலும் வெளிப்படையான செய்கைகள் பணியில் காலந்தவறாமை இயல்பான ஈடுபாட்டுடன் பணிகளை முடிக்கும் திறன் அத்தனையும்  அவருக்கே உரியவை.மின்வாரியத்தில் போதுமான பணிக்குப்பிறகு சுழலுகின்ற மோட்டார் எந்திரங்களுக்கு அடிப்படைத்தேவையான பேரிங் வணிகத்தில் நுழைந்து ஈரோடு நகரில் சாதனை நிகழ்த்தியவர். போதுமான உழைப்பிற்குப்பிறகு வணிகத்திலிருந்தும் முற்றிலும் நகர்ந்து ஆன்மீக நிகழ்வுகளிலும் அரிமா இயக்கத்தின் அளப்பரிய தொண்டுகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். நட்புக்காக எப்போதுமே காலத்தையும் தூரத்தையும் துச்சமாக கருதுபவர்.
                      அவரோடு வந்த பழநிச்சாமி இடைக்காலத்தில் எங்களுக்கு அறிமுகமானவர் . பணிக்காலங்களிலும் சரி மற்றநேரங்களிலும் சரி எங்களுக்கெல்லாம் துணையாகவும் தூணாகவும் திகழ்ந்தவர். என்றும் இனிய முகத்தோடும் இன்சொற்களோடும் விளங்கிய பழநிச்சாமி இன்றும் அப்படியே இருந்தது என்னை நெகிழவைத்தது.
என்னோடு வந்த குமரசாமி திருவாரூரை அடுத்த சிக்கல் கிராமத்தை சேர்ந்தவர். எல்லாராலும் சிக்கலார் என்று அன்போடு விளிக்கப்படுபவர். வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் எனக்கு ஒருவருடம் முதலானவர். திராவிட இயக்கத்தைச்சார்ந்த பகுத்தறிவுப்பரம்பரை.பணியிலும் சரி சூழ்ந்திருப்போர் வாழ்விலும் சரி எதிர்படும் சிக்கல்களை களைவத்தில் எப்போதுமே முன்நிற்பவர். நெஞ்சுறுதி மிக்கவர். பணிக்காலங்களில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தவர் .  தானெடுக்கும் முடிவுகளில் தனித்து நிற்பவர். இன்றும் பன்முனை விற்பனையில் பலருக்கு துணையாக வாழ்பவர்.
             நண்பர் வேதசிரோன்மணி திருச்சியில் எனக்கு அறிமுகமானவர் .உருண்டையான முகம்  உயர்ந்த உருவம்  உயரத்துக்கேற்ற உடல் . ஒரு இலக்கியவாதியை  நினைவூட்டும் தோற்றம்.. மணிமணியான கைஎழுத்துக்கும் இசைக்கு அழகு சேற்கும் இனிமையான குரல் வளமும் அவருடையது.  அவர் இசைக்கும் சுப்ரமணிய பாரதியாரின் இசையை கேட்கவேண்டும் அவர் இயல்பாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தும்போதும் ஓய்வாக இசையை இசைக்கும்போதும் அவர் குரலிலும் முகத்திலும்  ஏற்படுகிற மாற்றங்கள் பின்னாளில் அவர் ஒரு சிறந்த கிருத்துவமதபோதகராக உருவெடுக்க உதவியிருக்கக்கூடும். இடையிலேயே பணியிலிருந்து விடுபட்டு தன் எஞ்சிய வாழ்வை தியாகத்திருமகன் ஏசுவின் நெறிபரப்பும் ஒரு கிருத்துவ மதபோதகராக இப்போது வாழ்வது மகிழ்வுக்குரியதே. 
            எங்களை விருந்துக்கழைத்த நண்பர் ஜெகநாதன் எங்களிற் பெரிதும் மாறுபட்டவர். மாநிறம் , சராசரிக்கு சற்று கூடுதல் உயரம் , வலுவான உடலமைப்பு  புன்னகைக்கும் முகம்  -அறுபத்தாறுகளில் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில்  அறிமுகமான ஜெகநாதன் கடந்த முப்பாண்டுகளுக்கு மேலாக மின்வாரியப்பணியிலும் என்னோடு  ஒன்றாக பயணித்தவர். நெஞ்சத்தில் உறுதியும் நேர்மைத்திறனும் நிரம்பப் பெற்றவர்.பணியில் இயல்பான ஈடுபாடு முக்கியமாக காலந்தவறாமை திறன் மிக்க பொறியாளர்களை நண்பர்களை  மதிக்கின்ற பாங்கு ஜெகநாதனுக்கு சொந்தமானவை. எந்த சூழல்களிலும் தான் எடுத்த முடிவுகளிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ளாதவர். பின்விளவுகளை துச்சமாக மதிக்கும் மன உறுதி மிக்கவர்.அவரது துணைவியும் மூத்தமகள் கவிதாவும் தொடற்சியாக இரண்டு நாட்கள் தலைவாழை இலையில் விதம் விதமாக உணவளித்து உபசரித்த விதம் தஞ்சை மண்ணில் விருந்தோம்பல் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை எங்களுக்கு உணர்த்திற்று.
              கர்நாடகத்தில் தோன்றி தமிழ்மண்ணில் பாய்கிற காவிரி இந்த மண் செழிப்புற தான் பாயும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிளை நதிகளை உருவாக்கிவிட்டு தொடர்ந்து வங்கக்கடலை நோக்கி பயணிப்பது வியப்பானது.              ஏறக்குறைய நான்குக்கு மேற்பட்ட கிளை  நதிகளால் சூழப்பட்டது வன்னியடி கிராமம் . தஞ்சைத்தரணியே வரட்சியின் பிடியில் சிக்கித்திணறியபோதும் வன்னியடி பசுமைக்கோலம் பூண்டிருந்தது பாற்பதற்கும் கேட்பதற்கும் வியப்பானதுதான்.வாழை கரும்பு கருணை என்று பல்வேறு பயிர்கள் செழிப்புற்று வன்னியடி எப்போதும் பசுமைப் பிரதேசமாய் உருவெடுத்திருக்கிறது.மேகங்கள் திரளும்போது ஆனந்த நடனமாடும் மயில்களும் பழம் தின்னி வௌவால்களும் தஞ்சை மாவட்டத்திலேயே  வன்னியடியில் சூழ்ந்துத்திரிவது வன்னியடியின் மாறாத பசுமைக்கு சாட்சி. 
              மொத்தத்தில் பெருநகரங்களுக்கிணையான சகல வசதிகளையும் பெற்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமமாக திகழ்ந்தது வன்னியடி .              
இந்த இரண்டு நாட்களில் நாங்கள் கடந்துவந்த முப்பதுக்குமேற்பட்ட ஆண்டு மின்வாரியபணியில் நிகழ்வுற்ற பல்வேறு நிகழ்வுகளை ஒருசேர அசைபோட்டது அத்தனை இனிமையானது.  நாங்கள் எங்கள் பணிக்காலங்களில் சந்திக்க நேர்ந்த திறன் வாய்ந்த பொறியாளர்களையும் அரசாங்க அழகுச் செடிகளாக அங்காங்கே நின்றிருந்த தவிற்க இயலாதவர்களையும் திரும்ப நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம் கலை இலக்கியம் அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை .காலை நேரங்களில்  வன்னியடியை சூழ்ந்திருந்த  நதிக்கரை ஓரங்களில் காணப்பட்ட பசுமைப்பிரதேசங்களையும் மாலை நேரங்களில் கும்பகோணத்து மகாமகக் குளக்கரையிலும் பொழுதை ரசித்தது  கழித்தது  மறக்க இயலாதது.
எண்ணற்ற வரலாற்றுத்தடங்கள் தஞ்சைமண்முழுதும் இறைந்து கிடந்த போதும்  இந்தசந்திப்பில் எங்கள் கண்களுக்கு இரையான ஒரு தானிய காப்பகத்தை சொல்லியாகவேண்டும்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் ரகுநாதன் கட்டிய 36  அடி உயர தானிய காப்பகம் ஒன்றை பாபநாசம் சிவன் கோயில் வளாகத்தில் காணநேரிட்டது. மெல்லிய செங்கற்களையும் சுண்ணாம்புக்  காரைக ளையும்   கொண்டு கட்டப்பெற்ற அந்த கிடங்கு 3000 கலம் தானியங்களை நெடு நாட்களுக்கு சேமிக்க வல்லது வெப்பதட்ப சூழல்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பெற்ற அந்த கிடங்கு தமிழர்தம் புத்திசாதுர்யத்துக்கு சான்றாக  இன்றும் நிற்பதை கண்டோம். இன்று  இந்த அரிய கிடங்கு தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  
              இந்த சந்திப்பில் வேலூரைச்சேர்ந்த திருவலம் டி.ராஜேந்திரன் கலந்து  கொள்ளாமற் போனது எதிர்பாராதது .கோவையில் நிகழ்ந்த செம்மொழி மகாநாட்டைபோல் பல்வேறு சிந்தனைகளையும் விதைத்து விட்டு    ஜுலை  30 மாலை அனைவரிடமும் விடை பெற்று கொண்டு மாறுபட்ட திசைகளில பயணப்பட்டோம்.
                இறுதியில் நாங்கள் அறிய நேர்ந்த செய்தி நண்பர் ஜெகநாதன் எங்களில் எத்தனை வித்தியாசமானவர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்தது .ஜுன் 28 அன்று அவரது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்ததுதான் அந்ததகவல். அகத்தின் துயரை முகத்தில்  சிறிதும் எதிரொலிக்காமல் இரண்டு நாட்கள் எங்களோடு .....எப்படி   ..என்னால் என்றுமே இயலாத ஒன்று.அவரது தாயார் துயரிலிருந்து விடுபட்டு பிணியின்றி நீண்டு வாழவேண்டும் !
                       வன்னியடியை விட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்  அடுத்து ஒரு சந்திப்பு நிகழ ஒவ்வொருவர் சூழல்களும்  துணை நிற்கவேண்டும்.



13 கருத்துகள்:

  1. நல்ல சந்திப்பு, தன் மன இறுக்கத்தை தாயாரை பற்றிய நினைப்பை வெளிக்காட்டாது இருந்த நண்பர் எத்தனை அற்புதமானவர்..

    பதிலளிநீக்கு
  2. அய்யா, அருமையான பகிர்வு! பத்து வருட பிரிவிற்குப் பிறகு இப்படியான ஒரு சூழலில் ஒரு ரீ-யூனியன்... ம்ம்ம்!!

    //அகத்தின் துயரை முகத்தில் சிறிதும் எதிரொலிக்காமல் இரண்டு நாடகள் எங்களோடு.....//

    வாவ்!!

    பதிலளிநீக்கு
  3. உங்க ப்ரோஃபைலிலிருந்து எடுத்தது:

    //பணியில இருந்து விடுபட்டு தனியாக நின்றபோது எங்கோ தொலைத்துவிட்டு வந்த என் நிறைவேறாத கனவுகளை தேடத்துவங்கினேன்.//

    கண்டிப்பாக இதனைப் பற்றி நீங்க நிறைய எழுதணும்... கனவுகளை தொலைத்துக் கொண்டிருந்த அந்த நாட்களினூடாக எது போன்ற எண்ணங்கள் அதன் பொருட்டு இருந்தது என்பது பற்றியும்.

    // அதன் விளைவு – வேர்கள் பிறந்தது.//

    நிறைய தமிழக ஊர்களைச் சுற்றிய அனுபவமும், அந்த ஊருக்கான மண்ணியல்பும் அவதானிக்கும் வாய்ப்பும் நிறைய கிடைத்திருக்கக் கூடும்தானே, வெளியே எடுத்து விடுங்க, படிப்போம். நன்றி!!

    பதிலளிநீக்கு
  4. இனிய நண்பர்களுக்கு நன்றி !
    திரு. கே.ஆர்.பி செந்தில்
    திரு.ராம்ஜி யாஹு
    திரு.தெ.க
    இத்தனை விரைவாக வேர்கள் உங்களை எட்டும் என்று எதிர் பார்க்கவில்லை.உங்கள் நட்ப்பை நேசிக்கிறேன்.
    பாண்டியன்ஜி
    pandiangee@gmail.com

    பதிலளிநீக்கு
  5. Dear Uncle, I read your blog and in particular, I read your narration about your visit to my Parent's place Vanniyadi. While reading your narration, I felt as if I was there in Vanniyadi. I would like to thank you and all of my dad's other friends who visited my parents in Vanniyadi. When I spoke to my dad after your visit, he told me that he was very very happy about your visit. Something that my dad will remember for the rest of his life. Once again, I would like to thank all of you for your visit and also for sharing your experience in your blog. I would encourage all of you to do this get together atleast once every year.

    Anbudan,
    Sangeetha Jaganathan

    பதிலளிநீக்கு
  6. Dear Uncle,
    Vanakkam. Let me introduce as son of the eldest sister of Mr. C. Jaganathan, presently working as a Central Govt. Officer at Trichi. He was the inspiration behind me for my growth. Thanks for taking me to Vanniyadi.
    I was one of the students of that high school in 1965-67(10th and 11th of my school finals.)

    A news: My grand mother is fine now.Thanks for your good wishes.

    If you kindly permit me, I have a few requests:
    1. pl. use the tamil initials in your name.
    2. you and your friends met on June,29th. In the blog, it is written as July,29.

    Pl. keep it up.

    I have become a fan of you. may be you will get more comments.

    Asokan.T
    09.07.2010

    பதிலளிநீக்கு
  7. அன்பு சங்கீதாவுக்கு ,
    வேர்களை பார்வையிட்டு மறுமொழி எழுதியதற்கு நன்றி.
    இன்று வரண்டு போயிருக்கும் தஞ்சை மாவட்டத்தில் மிச்சமிருக்கும் ஈரப்பிரதேசமான வன்னியடியில் இரண்டு நாட்கள் இளைப்பாறி திரும்பும்போது
    உன் தாயாரும் சகோதரியும் உன் தந்தையுடன் ஓடியோடி உபசரித்ததை எண்ணிப்பார்க்கிறேன். உண்மையில் நானே நன்றி சொல்லவேண்டும்..
    நல் வாழ்த்துக்கள் !
    -------------------------
    அன்பார்ந்த அசோகன் ,
    ஓரளவு உங்களை முன்பே அறிவேன் . இன்றைய சூழலில் --
    வலைப்பூவுக்கும் தமிழ் எழுத்துக்கும் சற்று புதியவன். என் பதிவில் ஏற்பட்ட தலையாய பிழையை உணர்த்தியதற்கு நன்றி. அடுத்து--
    மொழி என்பது இனத்தின் அடையாளமாகவும் பெயர் என்பது இடத்திற்கோ பொருளுக்கோ உயிரினங்களுக்கோ ஒரு அடையாளம் என்றே
    கருதுகிறேன். எங்கள் வீட்டில் அனைவருக்குமே தமிழ் பெயர்கள்தாம். என்னுடைய பழமையான தனித்தமிழ் புனை பெயர்களை இன்று
    ஜெகநாதன் போன்றோர் மட்டுமே அறியக்கூடும். ஏறத்தாழ 30 வருட இடைவெளியில் அரசுப் பணியில் இருந்தபோது பாண்டியன்ஜி என்றே
    அடையாளம் காணப்பட்டவன்.இப்போது ஜி யைத் திருத்துவதன்மூலம் என் நண்ப்களிடையே நான் வேறுபடக்கூடும் என்தைத்தவிற வேறு
    ஒன்றுமில்லை. தங்கள் மேலான ஆசையும் எனக்குண்டு.
    பாண்டியன்ஜ
    சென்னையிலிருந்து.... .

    பதிலளிநீக்கு
  8. Dear Uncle,

    Let me introduce myself. I am son of the younger brother of Mr.C.Jaganathan. I read your blog. It is wonderful. Now I am away from my native place. While reading your blog, I felt like I was at Vanniyadi for those 2 days. Thank you for visiting Vanniyadi and taking this small village to the world by web.

    My periappa(Mr.C.Jaganathan) always think differently in everything and make the environment lively. I am very much impressed with his gardening work.
    I believe for sure in future you will get-together at Vanniyadi every year with some more friends.

    Gunaseelan
    gunasam@gmail.com

    பதிலளிநீக்கு
  9. அன்பு குணசீலனுக்கு,
    உங்கள் மறுமொழிக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்ளுகிறேன்
    இனிய....பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு
  10. Dear Uncle,
    Vanakkam. I read your blog.very nice. Your post took me to Vanniyadi to my Uncle's house.

    My Uncle is a unique person in all aspects of life, thinking and ideologies which I admire.
    I love my aunt's traditional cooking and flair. I miss them very much.

    I'm glad you and your friends enjoyed the traditional Thanjavur hospitality and hope you have lot more get-togethrs in the future.
    Keep up your good work in the blog.
    Best Wishes.

    Anitha M

    பதிலளிநீக்கு
  11. அநிதாவுக்கு ,
    வேர்கள் வலைப்பூவை பார்த்து மறுமொழி எழுதியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.அவ்வப்போது நான் சந்திக்கின்ற நிகழ்வுகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.பாண்டியன்ஜி pangee@rediffmail.com

    பதிலளிநீக்கு
  12. sir enda kadaiyil en peyarai serkkavillaiye. Venkatesh/fm/grt/Korattur

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !